| Publisher | Vanathi Pathippagam [வானதி பதிப்பகம்] |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | 1 |
| Number of Pages | 100 |
| Product ID | RMB287027 |
காயல் பட்டணத்தின் அரச வீதியை அடுத்த மூன்றாவது வீதி விலைமகளிர் வீதியாதலால் அங்கு எல்லா வீடுகளிலும் கேளிக்கையும் கூத்தும் நடப்பது இயற்கையாயிருந்தாலும், அன்று மட்டும் அத்தகைய அரவம் ஏதுமின்றி வீதி பூராவிலுமே மௌனம் மண்டிக் கிடந்ததை வீதியை அணுகியதுமே இளையபாண்டியன் கவனித்தானானாலும், அதைப் பற்றிப் பொருட்படுத்தாமலேயே முகப்பு வீட்டை அடைந்தான். அந்த முகப்பு வீட்டின் அந்த காரமும் அசப்தமும் அவனுக்குப் பலத்த சந்தேகத்தைக் கிளறிவிட்டதன் விளைவாக, அவன் மிகுந்த எச்சரிக்கையுடனேயே முதல் கட்டைத் தாண்டி இரண்டாவது கட்டுக்கு வந்தவன், அங்கிருந்த விபரீத நிலையை எதிர்பார்க்கவில்லை. அந்த இரண்டாவது கட்டிலும் பூர்ண இருட்டடித்துக் கிடந்தாலும் இளைய பாண்டியன
