An online book store
Use App for a better experience
banner

Aalaya Vazhipadu En? Etharku? Eppadi? [ ஆலயவழிபாடு ஏன்? எதற்கு? எப்படி? ]

Author: Dina Thanthi Editorial Baord
icon

Rs. 190.00 + Shipping Charges

Price: Rs. 200.00 5% Offer
Out of stock.
Bell

when the product become available

Frequently bought together

Publisher Daily Thanthi Pathippagam [தினத்தந்தி பதிப்பகம்]
Product Format --
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 272
Product ID 978-81-935806-4-6

உலகியல் நல்வாழ்வுக்காக இந்து மதம் எண்ணற்ற தத்துவங்களை வழங்கியுள்ளது. ஆலய வழிபாட்டுக்கு பல நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் ஆலய வழிபாடு குறித்த அனைத்து செய்திகளையும் இந்த நூல் விரிவாக விளக்குகிறது. நமது உடலுக்கும் ஆலய அமைப்புக்கும் இடையே ஒரு ரகசியம் இருக்கிறது? கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அது எப்படி? கும்பாபிஷேக கிரியைகள் என்ன? பூஜை செய்வது எப்படி? தேங்காய் உடைப்பது ஏன்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு பத்திரிகையாளர் செ.செந்தில் குமார் இந்த நூலில் எளிய நடையில் பதில் அளித்துள்ளார்.

ஆலய வழிபாடு என்பது மனிதர்களுக்கு பயிற்சியையும், முயற்சியையும் தருகிறது. இதற்காகவே முன்னோர்கள் ஆலயங்களில் கருவறை, பிரகாரம், ராஜகோபுரம், கொடிமரம், உட்பிரகார சன்னதி என்று ஏற்படுத்தியுள்ளனர். இவற்றில் அர்த்தமுள்ள ஏராளமான ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. 

அதுபோல இறைவனை வழிபடும்போது செய்யப்படும் அபிஷேகம், ஆராதனை, மலர் அலங்காரம், திருநீறு, தீர்த்-தம், வாகனம், தீபம், தேர், நைவேத்தியம் போன்ற எல்லா விஷயங்களிலும் ரகசியங்கள் பொதிந்து கிடக்கின்றன என்று கூறும் ஆசிரியர் அதற்காக விடைகளைக் கூறுகிறார். மாலை மலர் நாளிதழில் தொடர் கட்டுரையாக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடர், இப்போது நூலாக வெளிவந்துள்ளது. கண்ணைக் கவரும் வண்ணப்படங்கள். பக்தர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.