An online book store
Use App for a better experience
banner

27 Natchathira Thalangal Parikara Muraikal [ 27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள் ]

Author: Dina Thanthi Editorial Baord
icon

Rs. 171.00 + Shipping Charges

Price: Rs. 180.00 5% Offer
Out of stock.
Bell

when the product become available

Frequently bought together

Publisher Daily Thanthi Pathippagam [தினத்தந்தி பதிப்பகம்]
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 208
Product ID 9788193129555

ஒவ்வொரு பூஜைக்கும், விரதத்திற்கும் தனி மகிமை உண்டு. எந்தப் பிரச்சினைக்கு எந்த தெய்வத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும், என்ன விரதத்தை கடைப்பிடித்தால் விரும்பியது நிறைவேறும் என்பதற்கு வழிகாட்டும் வகையில் பூஜைகள், விரதங்கள், அவற்றை பற்றிய புராண சாஸ்திர விளக்கம், விரதமுறைகள் மற்றும் விரதபலன்கள், காயத்ரி மந்திரம் ஆகியவற்றை மக்கள் பயன்பெறும் வகையில் 'வாழ்வை வளமாக்கும் பூஜை&விரதமுறைகள்' என்ற தலைப்பில் செந்தூர் திருமாலன் இந்த நூலை எழுதியுள்ளார். திருச்செந்தூர் மண்ணின் மைந்தரான செந்தூர் திருமாலனின் இயற்பெயர் எஸ்.நாராயணன். தஞ்சை தினத்தந்தியில் செய்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பத்திரிகைத்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். சித்தானந்த சுவாமிகள் வரலாறு, மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி, மயிலம் முருகன்கோவில், வில்லியனூர் மாதா, வில்லியனூர் திருக்காமேசுவரர், திருவக்கரை வக்கிர காளியம்மன் வரலாறு உள்ளிட்ட ஏராளமான ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் செந்தூர் திருமாலன் எழுதி, தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்ட '27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்' புத்தகம் பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, குறுகிய காலத்தில் பல பதிப்புகளை கண்டு பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி சாதனைப்படைத்தது.  இந்த நூல் எழுத சிவாச்சாரியார்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் சில பட்டாச்சாரியர்களின் நேர்காணல், களப்பணிகள் மேற்கொண்டும் பல தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.  'வாழ்வை வளமாக்கும் பூஜை&விரதமுறைகள்' நூலை படித்து விட்டு, வேலூர் பொற்கோவில் நிறுவனர் அருட்திரு சக்தி அம்மா, "விரதங்கள் குறித்து பல உண்மைகளையும், புராண சாஸ்திர விளக்கங்களையும், விரதத்தின் முறைகளையும் மற்றும் விரதத்தின் பலன்களையும், பூஜைகள் பற்றியும் முழுமையான தகவல்களுடன் 'பூஜை&விரத அகராதி' போல் வெளியிட்டு இருப்பது பாராட்டத்தக்கது. இந்நூல் ஆன்மிக உலகிற்கு கிடைத்த ஞான பொக்கிஷம் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.